நண்பர்ஸ்..

Friday, July 15, 2011

எங்கே அந்த பதிவர்!

பதிவுலக உள்குத்து...!!

 டந்த இரண்டு வார காலமாக பிரபல பதிவர் ஒருவர் காணாமல் போய்விட்டார்... அவர் மீண்டும் பதிவுலகத்திற்கு வரவில்லை என்றால்  தீக்குளிப்பேன் என்று எச்சரித்துள்ளார் மற்றொரு பிரபல பதிவர்!!
 என்ன நடக்கிறது..? இதோ நியூஸ் அப்டேட்...

அவர் வசிக்கும் நாட்டில் உள்ள ஒரு டவர்.
 டந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஜெக ஜோதியாய் இருந்த பதிவுலகம் இப்போது ரொம்பவும் தான் வாடிப்போயுள்ளது... யாரும் ஒழுங்காக பதிவு  போடுவதில்லை என்றும்.... மற்றவரின் தளங்களுக்கு செல்வதில்லைஎன்றும்... ஏகப்பட்ட புகார்கள்...
அவரின் உருவப்படம்.
                                            பிரான்ஸ்சில் இருந்து பதிவெழுதும் ஒரு பிரபல பதிவர் சில வாரங்களாக காணவில்லை.. மற்றவர்களின் பதிவிற்கு நிறைய, நீண்ட பின்னூட்டங்களை இடும் இவர் ரசிக்கவைக்ககூடிய பல சுவாரச்சியமான பதிவுகளை எழுதுவார்... இவர் காணாமல் போனது வளர்ந்துவரும் பதிவர்களுக்கு பேரிடியாக போனது....
ஏன் அவர் பதிவுலகத்தை விட்டு போனார் என்பதற்கு சில பதிவர்கள் சொல்லும் காரணங்கள்:

பிரச்சனைக்குரிய நடிகை ஹன்ஷிகா.
மைந்தன் சிவா: "அவருக்கும் எனக்கும் சில நாட்களாக சண்டை... அதாவது அவர் ரூட்டு விட்டுக்கொண்டிருந்த பிரபல நடிகை ஹன்ஷிகா  என்னை காதலிப்பதாக சொன்னதும் அந்த பதிவர் மனதளவில் பாதிக்கப்பட்டு ஒரு மனநோய் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் அறிந்தேன்..."





முன்னால் காதலி,நடிகை  நமீதா.
நாற்று நிரூபன்: "உந்த கோதாரி விழுந்தவன காணேல எங்க போனான் எண்டும் தெரியேல உவன் நமீதா எண்ட ஒரு நடிகைய லவ் பண்ணிக்கொண்டு திரிஞ்சான் அந்த நடிகைய சி.பி.செந்தில் காப்புரிமை வாங்கிட்டதால ஹன்ஷிகா என்ற ஒரு பிகர லவுசு விட்டுக்கொண்டிருந்தான்.... அதிலையும் ஏதோ பிரச்சினை போல...... எதுவாயிருந்தாலும் சரி   இன்னும்  ரெண்டு நாள்ல   வரவில்லை எண்டால்  நான் தீக்குளிப்பேன் என எச்சரிக்கிறேன்..." கோபத்துடன்  முடித்தார் நிரூ.

அட்ரா சக்க செந்தில்: "பாவம்ங்க அவர்... நல்ல ஒரு ஜீவன்... யாருக்கும் கெடுதல் நெனைக்கமாட்டார்... எதோ பிரெஞ்சுக்காரி  கூட லிங்க் இருந்திச்சாம் அந்த பிரச்சினைல தான் வரல ன்னு பேசிக்கிறாங்க...."என அனுதாபத்துடன் கூறினார் செந்தில்....


 

நாஞ்சில் மனோவிடம் பேசினோம்... " எனக்கொண்ணும் தெரியாதுங்கோவ்.. அந்தாளுக்கு ஓவரா முடி கொட்டிருச்சி... அத நான் ரெண்டு மூணு இடத்துல சுட்டிக்காட்டினேன் பெருசுக்கு கோவம் வந்திடிச்சு போல.... அது எங்கனா சந்துல பொந்துல  கெடக்கும் அப்புறமா வந்துடும்... பாவம் யார் பெத்த புள்ளையோ...."  என்றார்...

அவர் புதிதாக வாங்கிய இசைப்பேழை.
 "அந்த பதிவர் ஊர்ல இருக்கும் போதே ஏகப்பட்ட பொண்ணுங்ககூட சகவாசம் வச்சிருந்திருக்கார்...  இப்போ பிரான்ஸ் வந்தும் அங்கேயும் ஏதோ பிரெஞ்சுக்காரி... நீக்கிரோ காரி... அப்பிடி இப்பிடின்னு சுத்திட்டு இருந்தாப்ல... என்னடா இவனுக்கு மட்டும் இப்படி பிகருங்க்களா மாட்டுதுன்னு பிரபல "அருவாள்" பதிவர் அவரை போட்டுத்தள்ளியதாக நியூஸ் வந்திச்சு..." என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத பிரபல "கக்கா" பதிவர்....

ரி உண்மை நிலவரம் தான் என்ன.... ???

 பிராஸ், 'லா சேப்பல்' எனும் பகுதியில் அவர் வசிக்கும் வீட்டிற்கு தொலைபேசியில்  தொடர்பு கொண்டோம்.... பதிவர் எங்கே என கேட்டதற்கு எதிர் தரப்பில் இருந்து ஒரு பெண் குரல் "அவர் எங்கேயும் போய்விடவில்லை.. ஹன்ஷிகாக்கு அப்புறம் தமிழில் புது நடிகைங்க யாரும் வரல அதனால அவர் லவ் பண்ணுறதுக்கு யாருமே இல்லை... அப்பிடியிருக்கிறப்போ எப்பிடி டெய்லி  பதிவு போடுறது? அதனால தான் வரல... " என கூறினார்.

என்னமோ போங்க... அவர் சீக்கிரமே வரணும் எங்கிறது தான் எங்க எல்லோருடைய ஆசை...