நண்பர்ஸ்..

Sunday, May 22, 2011

ராசா இருக்கும் இடமே.....!!!




முதலில்  சில  கில்மா கதைகள்..

கணவனும் மனைவியும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்...
மனைவி தூக்கத்தில் உளருகிறாள்..
  "சீக்கிரம்... சீக்கிரம் ஓடிவிடு.... என் கணவன் வந்துவிட்டான் ..."

அதைக்கேட்ட கணவன் திடுக்கிட்டு எழுந்து..,  அருகில் இருந்த ஜன்னல் வழியாக குதித்து ஓடுகிறான்...
 (நாசமா போச்சி.... ரெண்டுபேருமே இப்பிடியா?)

****

கணவன் மனைவி பேசிக்கொள்கிறார்கள்...
"நீ மட்டும் வீட்டுவேலைகளை ஒழுங்காக செய்தால் வேலைக்காரியை நிறுத்திவிடலாம்..."

மனைவி பதிலளிக்கிறாள்:
"நீங்கள் மட்டும் ஒழுங்கான  புருசனாக நடந்துகொண்டால்  நானும் தோட்டக்காரனை  நிறுத்திவிடுவேன்..."
  (ஹிஹிஹி.. நன்றி அரசு, (குமுதம்) )

****
 கருணாநிதி  கடிதம் எழுதுகிறார்.
 "அன்பு மகளே கனிமொழி... நீ பயப்பிடாதே,... உன்னை நான் திஹார் ஜெயிலில் இருந்து வெளியே பெயிலில் எடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்...."
கனிமொழி பதில் கடிதம் போடுகிறார்.
"இல்லை அப்பா... ராசா இருக்கும் இடமே இந்த ரோசாக்கு சொர்க்கம்..... தயவு செய்து வேண்டாம்..."

 (அடப்பாவிகளா.....!)

**** 

மேலும் சில மொக்கைகள்.....

 01 ) "காங்கிரசோடு  கூட்டணி நன்றாக இருக்கிறது"  #கருணாநிதி 

 (இத சொல்லும் போது கூட உதடுகள் ஒட்டலியே... )


02 )"சட்டம் ஒழுங்கை நிலைநாடுவதே முதல் வேலை.."# ஜெ.  
 (மேடம்... அந்த லேப்டாப் மேட்டர  ரெண்டாவது வேலையா வச்சிக்க மறந்துடாதிங்க... )

03 )"ஒரு கோடி ருபாய் சேலஞ்ச்...!!!" சேலஞ்'கு  ஒருபயலுமா இல்ல...???
 (இல்ல ஆறு மாசமா இதையே ஓட்டுறாங்களே... அதான் கேட்டேன்...!!)

04 ) மேற்கு வங்கத்திற்கு பங்கம் வராத மாதிரி ஆட்சி அமைங்க மம்தா பா(எ)னர்ஜி..!
  (உங்க ஊர்ல எத இலவசமா குடுப்பிங்க?)

05 ) நகைகள் விற்கும் கடைகளின் விளம்பரங்கள்  குறைந்து மாறாக  அடகு வைக்கும் கடைகளின் விளம்பரங்கள்  பெருகிவிட்டன.......#காலத்தின் கோலம்.
(சேட்டுங்களுக்கு வாழ்வு!) 

06 ) தனிமனிதனுக்கு காதல் வந்தால் உலகமக்கள் எல்லார் மீதும் காதல் வந்துவிடுகிறது அவனுக்கு! #லவ்வாலஜி.
 (பொண்ணுங்களுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது!?)


மீண்டும் பல மொக்கைகளுடன் உங்களை சந்திக்கிறேன்.
ஓட்டு முக்கியம்.கமெண்ட்ஸ் அதவிட ரொம்ப முக்கியம்...

Thursday, May 19, 2011

"பச்ச பச்சையாய்"  பேசலாம்  வாங்க...!!!


.... "என்னடா உன்னோட ப்ளாக் ஒரே பச்சை கலர்'ல இருக்கு?''னு கேக்குறிங்களா ? பெருசா ஏதும் காரணம் இல்லைன்னாலும்,  பச்சை கலருக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கு...
என்னன்னு பாக்கலாமா? (ஹல்லோ எங்க போறிங்க? வேணாம்'னாலும் நாங்க விடமாட்டோம்..) 
      "இச்சை மூட்டும் பச்சை நிறமே..." என்று வைரமுத்து பச்சையை பற்றி எழுதியிருக்கிறார்,... ( அவரு எழுதுவாரு.. தெரியாதா? நீ என்னலே எழுத   வர்ரே? )
 அவர் ஏன் அப்படி எழுதினார்?
காரணம் பச்சைக்கு ரைமிங்'ஆ  இச்சை'ன்னு வந்ததால தான்... வேறென்ன?(மனோ.. ப்ளீஸ் அருவாள கீழ போடுங்க....)

 இந்தியாவின் கிரீன் சிட்டி எது தெரியுமா? அதுக்கு முன்னாடி பெயருக்கு காரணம் சொல்லிடுறேன்... கிரீன் சிட்டி என்றால் பசுமை நகரம்... பசுமை என்றால் பச்சை பசேல் என்று   இருக்கிற இடம்.. அது ஏன் பச்சையா இருக்கு?
ஏன் நீல கலர்ல இல்ல?                   

இதுக்கு பதில் சொல்லுற தகுதி இந்தியாவிலேயே  பன்னிக்குட்டி ராம்சாமி ஒருவருக்கே உள்ளது என்பதால் நேரே  (தப்பிச்சுட்டம்'ல...)
  விஷயத்திற்கு வர்றேன்... இந்தியாவின் பசுமை நகரம் என்று அழைக்கப்படுகிற நகரம் புனே.


 இதுக்கு என்ன அர்த்தம்?

 *பச்ச மண்ணு அப்பிடின்னு சொல்லுறாங்களே? எந்த ஊர்ல மண் பச்ச கலர்ல இருந்திருக்கு?

 *பச்சத்தண்ணி ங்கிறாங்களே?
தண்ணி எப்பிடி பச்ச கலர்ல? 'குடி'மக்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. (விக்கி உலகம் வகையறாக்கள்...)

 *பச்சைபச்சையா பேசுறதுன்னா என்னங்க? ரொம்ப நாளா எனக்கு டவுட்டு.. (உங்கள்'ல  யாருக்காவது  சிவப்பு கலர்'ல பேசுற பழக்கம் இருக்கா?
*கிரீன் டீ தெரியுமா?
'கமீலியா சைனஸிஸ்'  (பமீலா இல்லைங்க..) இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆகும். பசும் தேநீர் (தமிழேன்யா..!) சீனாவில் தோன்றியது,(இது ஒண்ணுதான் உண்மையிலேயே பச்ச கலர்ல இருக்கு!)

நான் ஏன் என்னுடைய ப்ளாக்'அ பச்சையா மாத்திட்டேன்'னா நாமேளும் விவசாயி'தாங்கிறத காமிக்க தான்.. யோவ்.. அவனவன் பூச்செடிக்கு தண்ணி ஊத்திட்டு விவசாயி என்கிறான்... நான் சொன்னா மட்டும் தப்பா...???? 

இத்துடன் அனைத்து மொக்கைகளும் முடிவுக்கு  வருகின்றன...ஓகே நண்பர்களே.. நீங்க பச்சையா கமெண்ட்ஸ் போடுங்க... நான் கெளம்புறேன்...
டிஸ்கி:யாருக்காவது பச்சயா திட்டனும் போல இருந்தால் தனியே மெயிலில் திட்டவும்.ஏனென்றால்  இது மிகவும்  கன்னி... கண்ணியப்பர்... கண்ணியமான் அது என்ன செந்தில்...? எதோ சொல்வீ ங்களே? ஆங்..மிகவும் கண்ணியமான பதிவரால் நடாத்தப்படும்  ப்ளாக்! கரைகட்'டா?... ம்ம்ம்...கெளப்புங்கள்.. ..

டிஸ்கி 02 : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி வெகு விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்போம்...

Wednesday, May 18, 2011

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???

லங்கையிலிருந்து என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் இருந்து ஒரு சில பகுதிகளை உங்களுக்காக எடிட் செய்திருக்கிறேன்...
வலி நிறைந்த அந்த கடிதத்தில் வெளிப்பட்ட சில கோபங்களை எழுத்தில் கொட்டியிருந்தார்...


"

இன்று மே 18 . கருப்பு சூரியன் நாள்.

 திமுக வீழ்ந்ததற்கு காரணம். என்னுடைய பார்வையில்.... 
கருணாநிதி
""".....இப்படியான போர்ச்சூழலில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும் போது, தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருக்கும் மதிப்புக்குரிய திரு,கருணாநிதி அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என நம்பிக்கை கொண்டோம்... எங்களுக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்...
  எதுவும் நடக்கேயில்லை ... எங்களுக்கோ எதுவும் தெரியாத நிலை..தெரிந்து கொள்ள முடியாத நிலை... ஏதாவது நல்லது நடக்கும் என நம்பிக்கையோடு ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம்.. சண்டைகளுக்கு நடுவில் என் தங்கைக்கு ஒரு கால்  ஒடிந்துவிட்டது.. நானும் என்னுடைய அண்ணனும் எங்களுடைய உடைமைகளை எறிந்துவிட்டு தங்கையை தூக்கிக்கொண்டோம். வலி  பொறுக்கமுடியாமல் வீறிட்டாள்.. மருத்துவ உதவி இல்லை... சாப்பிடுவதற்கே உணவில்லை... ரத்த ஓட்டத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயன்றும் , முடியாமல் போகவே என் தங்கை இறைவனடி சேர்ந்தாள். 
 கண்களில் கண்ணீருடன் தொடந்து இடம் பெயர்ந்துகொண்டேயிருந்தோம்.. கண்களில் நான் கண்ட காட்சிகள் அனைத்தும் கொடூரமானவை...
நாங்கள் இப்படியாக இருக்க..
 கருணாநிதி அவர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் மத்திய அரசிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டோம்..,... விடிவுகாலம் வரப்போகிறது என முழுமையாக நம்பிக்கொண்டிருந்தோம்... சண்டை நடந்துகொண்டிருக்கும் பொழுது பல கடிதங்கள் கருணாநிதி எழுதியிருக்கிறார்.. நாங்கள் இப்போது முள்வேலிக்கு நடுவில் இருக்கும் போது கூட கடிதங்கள் பல எழுதிக்கொண்டிருக்கிறார்...
எம்.ஜி.ஆர். மற்றும் பிரபாகரன்.


சந்தேகம் வந்துவிட்டது எங்களுக்கு.

நம்பிக்கை துரோகம்.. 

காங்கிரசசோடு தான் உங்களுக்கு கூட்டணியா? ஐயகோ நீங்கள் எப்படி உங்கள் ஆட்சியை துறந்து எங்களுக்காக குரல் கொடுப்பீர்கள்.. நடக்காத கதையல்லவா அது... காங்கிரஸ்காரர்கள் எங்கள் மீது அளப்பெரிய கோபம் கொண்டுள்ளார்களே... அவர்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் அல்லவா? மத்தியில் ஆளும் அவர்கள் தயவுடன் நீங்கள் ஆட்சியில்  இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு விடிவு காலம் எப்படி சாத்தியம்..??? 
            எங்கள் நம்பிக்கைதான் வீணாகிவிட்டது... பின்பு சில விஷயங்களும் கேள்விபட்டோம்... இந்திய மீனவர்களை இலங்கை அரசு கொலையாய் கொன்றுகொண்டிருக்கும் போது என்ன செய்தீர்கள்? நாங்கள் அந்நியத் தமிழர்கள் சரி... மீனவர்கள்? அவர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள்? 
                          அவர்கள் தானே உங்களுக்கு வாக்கிட்டு ஆட்சியில் அமர்த்தினார்கள்... இறந்த குடும்பம் கண்ணீருடன் இருக்கும் போது.. அப்போதும் கடிதமா எழுதிக்கொண்டு இருந்தீர்கள்? அல்லது இறந்தவர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் பணம் பட்டுவாடா செய்துவிட்டு பேசாமல் இருந்து விட்டீர்களா?
உலகத்தமிழர்கள் அனைவரும் எங்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து நீங்களும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தீர்கள் என்றால் பிரச்சினை தீர்ந்திருக்குமே?
அதில் உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டியிருந்ததோ?
அரசியல் செய்யவேண்டும் என்றால் இப்படி செய்திருக்கலாமே?
 நீங்க மக்களை ஒன்று திரட்டி போராடியிருந்தால் (காங்கிரஸ் மயிராப்போச்சு என்று விட்டுவிட்டு ...) எங்களுக்கு விடிவு பிறந்திருக்கும். தமிழ் மக்களுக்கு விடிவு பெற்றுத்தந்த தானே தலைவன் என்று உங்களை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்திருப்பார்களே...

 வரலாற்றின் திமுக ஆட்சியின் பக்கங்களில், தலைவன் நீங்களே இப்படி கரி பூசிக்கொண்டீர்களே  ... எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஈழத்தமிழன் நான் சொல்கிறேன்... நீங்கள் இனி ஒரு காலத்திலும் அரசாள முடியாது... ஆட்சி அமைக்க முடியாது... திமுக எனும் கட்சியை பேரீட்சை பழத்திற்கு கொடுத்து விடுங்கள்...

மேலும்....
 தமிழ் நாட்டின் தயவு இனி எங்களுக்கு தேவைப்படாது... உங்கள் அரசியலில் உச்ச நாகரீகம் இல்லை.. பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டீர்கள்.. எங்களை அம்போ என்று  விட்டு விட்டது போல் தமிழ் நாட்டு மக்களை விட்டுவிடாதிர்கள்.. பணத்திற்கு ஓட்டு என்பதெல்லாம் இனி நடக்காத காரியம்... பின்பு ஓட்டிற்கு கையேந்த வேண்டும்..
ஜெயலலிதா.
      ஜெயலலிதா அம்மையாருக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்... தயவு செய்து உங்கள் லாபத்திற்காக ஈழம் பற்றி பேசாதீர்கள்.. ஈழத்தமிழர்கள் பற்றியும் பேசாதீர்கள்.. உங்கள் நாட்டில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறதாம்... கரன்  (நான் தான்...)அடிக்கடி சொல்லுவான்.. இந்த பிரச்சினை எங்கள் ஊரில் இல்லை.. (எங்கள் ஊரில் தான் சில இடங்களில் மின்சார கம்பிகளே கிடையாதே...) பெற்றோல்... அதிக விலையாமே குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.. மிக முக்கியமாக ஊழல் செய்யாதிர்கள்.. மக்கள் பணத்தில் தான் நீங்கள் கை வைக்கிறீர்கள் என்பதை ந்ஜாபகத்தில் கொள்ளுங்கள்..பதில் சொல்லவேண்டும்.. 

மீண்டும் மீண்டும் சொல்ல்கிறேன்.. எங்களை மறந்துவிடுங்கள்.. உங்களின் ஒரு உதவியும் எங்களுக்கு தேவையில்லை.. 

நான் தமிழன்..
நாம் தமிழர்.
ஈழம் வீழ்ந்தாலும்,
ஈரம் காய்ந்தாலும் 
வீரம் வீழும் என்று நினைத்தாயோ..""

... என்று கடிதத்தை முடித்து  மின்னஞ்சல் செய்திருந்தான்... 
அவனுக்கு என்ன பதில் போடுவதென்று முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்...

Tuesday, May 17, 2011

இரண்டு மாதங்கள் மட்டும் புகை.

ங்களுக்காக சில கருப்பு வெள்ளை கால சினிமா விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். முன்னாடியே சொல்லிடுறேன்.கண்டிப்பாக அனைத்து தகவல்களும் திருடப்பட்டவை. படித்தவற்றை பகிர்ந்துகொள்ளும் நோக்கம் மட்டுமே!!!

01 )மஞ்சரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியார் நடித்த முதல் படம் "பக்த ராமதாஸ்".
நம்பியார் மற்றும் ஜெமினி கணேஷன்.


படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூபாய் 40. படத்தில் அவர் சில தெலுங்கு வசனங்கள்  பேசி நடித்திருப்பார்.

நடிகவேள்.
  அவரின் இரண்டாவது படமாகிய "இன்ப சாகரன்" என்ற படம் ஸ்டுடியோவில் தீப்பிடித்துக்கொண்டதால் படம் வெளிவரவேயில்லை. 1938 -ம் வருடம் ஜி.பட்டு என்பவர் டைரக்ட் செய்த அந்த படம் 80  நாட்கள் படமாக்கப்பட்டிருந்தது.

 02 ) திரைப்பட  விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  கலைவாணர் என்.எஸ்.கே.., "லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்.."என ஆங்கிலத்தில் ஆரம்பித்து விட்டு பேசுவதை நிறுத்திவிட்டார். வழக்கமாக தமிழிலேயே பேசும் வழக்கம் கொண்ட என்.எஸ்.கே, ஆங்கிலத்தில் பேச தொடங்கியதும் கூட்டமே வியப்பில் ஆழ்ந்தது.
        மீண்டும் பேச தொடங்கிய கலைவாணர் "எனக்கு அவ்வளவு தான் தெரியும்.அதற்குமேல் ஆங்கிலம் பேச தெரியாது" என்று மெள்ளச்சொல்ல.. அரங்கம் அதிர  சிரிப்பு. கலைவாணர் கலைவாணர் தான்.

03 )நடிகர் சிவகுமாரின் அறையில் ஒரு ஓவியம் எப்போதுமே கண்முன்னே தெரியும்படி வைத்திருப்பார். அவர் வரைந்த ஓவியம் தான். "அது நான்  1956 -ல் சினிமாவிற்கு வருமுன்னர் நான் வரைந்து, ஜெமினி கணேசன் அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட ஓவியம்" என பூரிக்கிறார் சிவகுமார்.

 04 ) சென்னை இந்திரா நகரில் 'பிரேமா' என்ற பெண்மணி கொலையுண்ட வீட்டிற்கு குடிவருவதற்கு யாருமே துணிந்து முன்வரவில்லை. கடைசியில் ஒரே ஒருவர் மட்டும் விஷயம் கேள்விபட்டு, "எனக்கும் பேயிற்கும் அப்படியொரு ராசி என சிரித்துக்கொண்டே "குடிவந்தார்.
 அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

வில்லன்  நம்பியார்.
05 ) "உங்கள் கணவர் புகைப்பிடிக்கிறாரே.. அதற்கு நீங்கள் ஆட்சேபனை சொல்வதில்லையா?"என்ற ஆனந்த விகடன் கேள்விக்கு பதில் கூறினார் திருமதி ருக்மணி நம்பியார்.
 "இல்லீங்க. வருசத்திற்கு இரண்டே மாதம் தான் சிகரெட் குடிப்பார். மீதி மாதங்களில் குடிக்கமாட்டார். அது என்னவோ அப்படியொரு பழக்கம்." என்கிறார்.

06 ) தமிழ்நாட்டின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் கதாநாயனாக நடித்த முதல் படமே ஜேம்ஸ் பாண்ட் பாணி படம்தான். "இரவும் பகலும்" என்ற  அந்த படத்தில்   ஒரு காட்சிக்கு  'டூப்' போடாமல் நடித்து,  10 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்கவேண்டியதாய் போயிற்று. 


07 ) தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டு திரைப்படங்கள் மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன . அவை எவை என  கீழே படங்களில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


700 நாட்கள் ஓடிய சந்திரமுகி.
3 தீபாவளி தொட்ட ஹரிதாஸ்.
டிஸ்கி 01:நன்றி ஆனந்த விகடன். குமுதம், கூகிள் .

டிஸ்கி 02:  நன்றி உங்களுக்கும். மீண்டும் ஒரு மொக்கை பதிவில் சந்திப்போம்.

Sunday, May 15, 2011

பத்தே நாட்களில் காணாமல் போன பதிவர்...!!!

ன்ண்ர்ளே..
       எப்பிடி இருக்கிங்க... "ரொம்பநாளா  ஏன் பதிவே போடல?"ன்னு யாரும் கேட்க மாட்டீங்க  எங்கிற தைரியத்துல மறுபடியும் வந்திருக்கேன். (ஹும்..அப்பிடியே கேட்டுட்டாலும்...) எனக்கு மட்டும் பதிவு போடணும்னு ஆசை இல்லையா என்ன...???!!! எல்லாம் பி.எஸ்.என்.எல் காரனுங்கோ பண்ணின சதி.. கொய்யால பில்லு கட்டணுமாம்.. (அவனும்  நாலு மாசமா அத தான் சொல்லிகிட்டு இருக்கான்...!!! நானும் எப்பிடியாவது கட்டிடுவேன் என்கிற நம்பிக்கை'ல இருக்கேன்..)


                   ரி என்ன பதிவு போடுறது... திரைவிமர்சனம்? ஊஹும்.. அதுக்கு நம்ம சிபி அண்ணே இருக்காரு...ஒரே நாள்லயே எல்லாப்படத்தையும் பாத்திட்டு, பக்காவா பதிவு போட்டு, பட்டைய கெளப்பிடுவாரு .. வேலையாவாது..

    சரி இப்பிடி போடலாம்..."ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?" அட..அதுக்கு நம்ம வடை அண்ணா இருக்காப்ல.. மாத்தி யோசிப்பதில்  மன்னன் ஆச்சே? அதுவும் சரிப்பட்டு வராது...

    "எனி காபிக்கொட்டை மேட்டர்?" ஐயோ பன்னிக்குட்டி பறந்து பறந்து அடிப்பாரு... அப்போ அஜால் குஜால் 18 +  மேட்டர்? அதுக்கெல்லாம் நிரூபன் தான் லாயக்கு. ச்சும்மா நின்னு நிறுத்தி..நிதானமா விளையாடுவாரு...

   "திங்கிறத பத்தி போடலாம்'னா .... உணவுக்குன்னே ஒரு உலகம் இருக்கே?

அப்போ என்ன தான் பதிவு போடுறதாம்? பேசாமல் டாக்குத்தர வச்சி காமெடி கும்மி போடலாமா? வேணாம் ஒரு பய படிக்கமாட்டான்...
களிங்கர்? அவரு தான் எங்க இருகுக்கார்னே தெரியலியே?
   பெரிய கரடி'ய வச்சி............???? ஆவ்வ்..ஹாஸ்பிடல் செலவு யாரு பாக்குறதாம்?


   கவிதை? வேணவே வேணாம் மனோ  அருவா தூக்குற சத்தம் கேக்குது.

சொந்த சரக்க வச்சி ஏதாவது ட்ரை பண்ணலாமா? நான் மட்டும் தான் திரும்ப திரும்ப படிச்சிக்கனும்..

 ஆங்.. ஒரே ஐடியா.. சமையல் குறிப்பு.. மெதுவடை சுடுவது எப்படி? பேல்பூரி செய்வது எப்படி? கொண்டக்கடலை அவிப்பது எப்படி? இப்பிடி ஏதாவது.... கண்டிப்பா இப்படி பதிவு  போட்டா நாலுல இருந்து ஐந்து ஓட்டு இண்டிலில விழும்.. அது பத்தாதே?

 அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?         
    
                        அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?

                                               அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?

                 "பத்தே நாட்களில் காணாமல் போன பதிவர் சாட்சாத் நானே!!" 
 டிஸ்கி: புகைப்படங்களில் "எம்மா ராபர்ட்" அம்மணி.. நன்றி mr.skin கில்மா வெப்சைட்.  
     
.