நண்பர்ஸ்..

Tuesday, March 29, 2011

கும்பகோணத்தில் கும்மி !!

டந்த நான்கு நாட்களாக  கும்பகோணத்தில்  கும்மி அடித்து விட்டு இப்போதுதான்  பாக்   டு  பார்ம். (சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்..)
கையில் மடிக்கனணியோ, வேறு சாதனங்களோ  இல்லாத காரணத்தினால் ஆப்ஸ் காண்ட்.

 இப்போ மேட்டருக்கு வருவோம்..
    தமிழ்நாட்டின்  மிகப் பிரபலமான கோயில்கள் அனைத்தையும் (கிட்டதட்ட..) பார்த்துவிட்டேன். எஞ்சியிருந்த கோயில்களை  கடந்த நான்கு நாட்களில் முடித்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.. (என்ன ..., 'மனம் கொத்தி பறவை' ரேஞ்சுக்கு இருக்குனு பாக்குறிங்களா? ஊம்.. சுயபுராணம்..)

நான் இப்போ ரெண்டு விஷயம்  சொல்லப்போறேன்... ரெண்டுமே கோயில்கள்  பத்தின விஷயம் தான்.,...
 

தமிழில் அர்ச்சனை..

   ஆச்சரியமான   விஷயம்.. அழகு தமிழில் அர்ச்சனை .
 புரியாத மொழியில் ஐயர் பூஜை  செய்யும் போது கவனம் எல்லாம் எங்கேயோ  இருக்கும்... ஆனால் இங்கு.. அழகு தமிழில்   சுவாமிக்கு வாழ்த்து ,பாடல்கள் எல்லாம் நடைபெற்றது . (வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள்  அநேகம் பேர்  இந்த அர்ச்சனையை  காண  தமிழ்நாடுதான் வரவேண்டும் என நினைக்கிறேன்..)

 அதுமட்டுமில்லாமல்  வெளியூரில் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு தமிழிலேயே அந்த கோயிலின் ஸ்தல  புராணம், பெயர்க்காரணம்   சொல்லி பூஜை  செய்தது மகா ஆச்சரியம்...


 கலக்கல் கற்சிற்பம் !!!

    சீர்காழியின்  வைத்தீஸ்வரர்  கோயிலில் தொடங்கி.. சுப்பிரமணிய சுவாமி (திருவிடைக்கழி)  கோயில் வரை ஒவ்வொரு கோயிலின் அமைப்பும் , சிற்பங்களும் (முழுக்க முழுக்க கற்கள்)  ஆச்சரியம்,.... ஆச்சரியம்...


 மார்க்கண்டேயர்  கோயிலில் (அட அவர்தானுங்க.. என்றும் பதினாறு'னு மனுஷன்! ) அவர் தங்கியிருந்த  இடம்... அந்த கோயில் எல்லாமே கொள்ளை அழகு.

   இந்த சம்மருக்கு உங்க பேமிலியோடு டூர் அடிக்க  இத் திருத்தலங்களை தேர்வு செய்தீர்கள்   என்றால்  மனநிறைவு, நிம்மதி  கிடைப்பது மட்டுமில்லாமல்  இதைக்கொண்டே இரண்டு  பதிவுகளை தேத்தி விடலாம். (ஐடியா !!)

 டிஸ்கி: கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால்  ஸ்ரீ  கூகுல் ஆண்டவர்  உதவியோடு  இங்கே சில க்ளிக்'கள்.

 டிஸ்கி: ஐந்து  நாட்கள் வேலைக்கு விடுப்பு.  ஓனருக்கு என் மேல கடுப்பு.
இதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....

டிஸ்கி: சாமி மேட்டருங்கிறதால  ஓட்டு போடாம போனா,  ரொம்போ  டென்சனாயிடுவேன் ......




 

Wednesday, March 23, 2011

வானமளவு யோசிப்போம்.!!


  ன்னைக்கு உங்க எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப்போறேன்.
 ( அல்லோவ்வ்.... விண்டோவ க்ளோஸ் பண்ணினாக் கொண்ணே புடுவேன்!)
தம்மாத்துண்டு கதை தாங்க... படிச்சிட்டு கமெண்ட் போடுங்க!
இந்த கதை சொல்லவேண்டிய அவசியத்தை கதை முடிவில் சொல்கிறேன்.


ஸோ கதை 
வானமளவு யோசிப்போம்.!!


  ஒரு குளவி 'ZZZZ ZZZ' என்று ஒரு தோட்டத்தில் பறந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய காளை மாட்டை பார்த்தது. சீவிய கொம்பும், திமிலும், கழுத்து மணியுமாக நிதானமாக புல் மேய்ந்து, அரைத்து, அரைத்து... அவ்வப்போது 'முஷ்...உஷ்..' என்று மூச்சுவிட்டுக்கொண்டு, காலை தரையில் தேய்த்துக்கொண்டிருந்தது கம்பீரக்காளை.!!!

         குளவி அதனருகில் சென்று அதன் கவனத்தை ஈர்க்க எண்ணி கண்ணுக்கு முன்னால் இங்குமங்கும் வட்ட வடிவிலும், எஸ் வடிவிலும் அட்டகாசமாகப் பறந்து சுற்றி வந்து.....
  "மாண்புமிகு திருவாளர் காளையர் அவர்களே.... நான் பறப்பது உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் சொல்லுங்கள் உடனே விலகி விடுகிறேன்" என்றது.

 காளை ஒரு கண்ணிமையைச் சற்று பெரிதாகதிறந்து குளவியைப் பார்த்தது.

 "அடேய் சின்னைப்பையா.... நீ இருந்தாலும் ஒன்று தான்.. பறந்தாலும் ஒன்றுதான். நீ இப்போது பேசியதால் தான் நீ இருப்பதையே கவனிக்க முடிந்தது. இதுவரை நீ இருந்தது கூட எனக்கு தெரியாது" என்று சொல்லி "உஷ்" என்று மூச்சு விட்டது. அந்த உஷ்ணத்தில், மூச்சு வேகத்தில் குளவி தள்ளப்பட்டு ஒரு மரத்தில் மோதிக்கொண்டு இறக்கை இழந்தது.

இந்த  கதையின் மோரல் என்னான்னா....
"மிகச்சிறிய மனங்களுக்குத் தான் மிகப்பெரிய கர்வங்கள்!" அப்பிடிங்கிறது தான்.  
எனவே, 

எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!

 டிஸ்கி: இது சுஜாதா ஸாரோட கதை. ( நிஜம்- நீதி!) பக்கம் 30. வெளியீடு ' நக்கீரன்.(இப்போ நான் வெளியிட்டிருக்கேன்.)

டிஸ்கி 2: நமீதா படம் போடாமலையே உங்கள படிக்க வச்சிட்டனே...அய்..அய்....

 டிஸ்கி 3: வானமளவு யோசிப்போம்'ங்கிற வார்த்தை "ஒவ்வொரு பூக்களுமே..."பாட்டுல வர்ர லிரிக்ஸ்'னு உங்க எல்லோருக்குமே தெரியும். (எனக்கும் தெரியும்!!)

பதிவு புடிச்சிருக்கா? மறக்காம குத்திட்டு போங்க... ஓட்டு....ஓட்டு!!




Saturday, March 19, 2011

தேர்தல் 2011.... ஆச்சியை பிடிப்பது நாங்கதானுங்கோஓஓஓஒ......!!!

தேர்தல் பீவர் அதிகமாகிக்கொண்டே வரும் இந்த சமயத்துல உங்களுக்கெல்லாம் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு ஒரே கன்பியூசனா இருக்கும்....
கவலய விடுங்க.... அதுக்கு நான் சில ஐடியா தர்ரேன்......


ஓட்டு போடுவதற்கு முன்னால் கவனிக்க வேண்டியவை.....


1)மொதல்ல.... உங்கள் ஏரியாவுக்கு பணம் பட்டுவாடா ஆகிடுச்சானு பாக்கனும்.....

2)உங்களுக்கு கிடைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் நல்ல நோட்டா கள்ள நோட்டா என்பதை கன்பஃர்ம் செய்து கொள்ளவும்....

3)உங்களை விட வேறு யாருக்கேனும் அதிகமாக பணம் கிடைக்கிறதா எனவும் பார்க்கவும்...


4)எந்த கட்சி என்ன இலவசம் தருகிறது என லிஸ்ட் போட்டு கணக்கிட்டுக்கொள்ளவும்....
5)பின்பு அந்த லிஸ்ட்'டை சரிபார்த்து, எந்த கட்சி அதிகமாக இலவசங்கள் தருகிறதோ அந்த கட்சிக்கு குத்தவும் ஓட்டை. (பி.கு.- லிஸ்ட்'டில் கம்பியூட்டர், பைக்குகள் இருந்தால் அக்கட்ட்சிக்கு கண்ணை மூடிக்
கொண்டு குத்தவும்....)

6)கடந்த ஆட்சியின் ஊழல்கள் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்காதிங்க... பின்னாடி ஓட்டு போட வரும்போது கான்ஸ்ஸன்ரேஷன் மிஸ் ஆகும்!!



7)இலங்கை தமிழனுக்காக அதிகம் யார் குரல் கொடுத்தது பத்தியெல்லாம் யோசிக்க தேவையில்ல...... அது நமக்கு தேவையுமில்ல......


8)""இலவசம் குடுக்குற கட்சிக்கு ஓட்டு போடாதே.... யாரு வேலைவாய்ப்பு,விலைவாசி, தமிழ் நாட்டின் எதிர்காலம் பத்தியெல்லாம் கவலைப்படுறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடு""னு உங்க பிரண்டு கூற நேரிடும்.... நம்பாதிங்க.... அடிச்சுக்கூட சொல்லுவாங்க... அப்பயும் நம்பா
திங்க....
.





9)"ஊழல் இல்லா ஆட்சி அமைப்போம்!" என உதார் விடும் கட்சியை கழட்டி விட்டுடுங்க....

10)முக்கியமா வேட்பாளர் உங்க வீட்டுக்கு வந்தப்போ யாரு நல்லா கால்ல விழுந்து ஓட்டு கேட்டாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடலாம்.... தப்பில்ல! ( நல்ல டியோட்ரண்ட் வாசம் வந்திருந்திச்சின்னா, ஓட்டை ரெண்டா குத்திடுங்க....)

11)கவனிக்கவும்: வாட்டர் 20 ரூபாயா இருந்தா பரவால்ல.... குவாட்டர் விலை குறைப்பானுகளா?னு கேட்டு வச்சிக்குங்க......



12)அரிசி 80 பைசாக்கு தர்ரோம்'னு எந்த கட்சி சொன்னாலும், ஓட்டு போடுவதற்கு தயங்காதிங்க.....( வெங்காயம் 100 ரூபாவாவே இருந்திட்டு போகட்டும்! அதனால நமெக்கென்ன நஷ்ட்டம்...???)

அவ்ளோ தான்.....
அப்புறமென்ன... உங்களுக்கேத்த கட்சிய தேர்ந்தெடுத்தாச்சா? நச்சுன்


னு குத்துங்க ஒரு குத்து.... (ஏது.... நீங்க எதிர்பாத்த தகுதிகளோட ரெண்டு மூனு கட்சி வருதா?....ம்ம்ம்.... என்ன பண்ணலாம்.... ஆங் ஐடியா..... அவங்க கிட்ட வாங்கின துட்டுக்கு அங்க ஒரு குத்து!
இவங்க கிட்ட வாங்கின துட்டுக்கு இங்க ஒரு குத்து... பதிவு புடிச்சிருந்தா இண்டிலில எனக்கொரு குத்து...ப்ளீஸ்!)

டிஸ்கி: டைட்டிலுக்கும் சப்ஜெக்ட்கும் சம்பந்தம் இருக்கிறதால.... காமெடி பதிவர்களின் விதிய மீறி செயல்பட்டதுக்காக எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்...!

டிஸ்கி: நமீதா பத்தி எதுவுமே எழுதாதிற்கும் மன்ச்சிக்கொங்கோகோவ்வ்.....



Friday, March 11, 2011

கல்பாக்கமும் சில கண்டங்களும்!



எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன பத்திதான் படிக்கப்போறிங்க..... அவனப்பத்தி தெரிஞ்சுக்கிட்டதும்
நீங்க தாராளாமா தூக்கு மாட்டிக்கலாம்.....
என்னுடன் ஷோரூம்'ல வேலை செய்கிறவன் தான் அவன்.... பெயர் பலராமன். (அவன பாலா'னு கூப்பிடுறதில்ல.... பல்ராம் நாய்டு'னு தான் கூப்பிடுவோம்.)

எப்போ பாத்தாலும் எழவு வீட்டுக்கு போன
வன் மாதிரி சோகமாதான்
இருப்பான்.
இந்த புது வருஷம் எல்லாருக்கும் எப்பிடி இருக்குன்னு தெரியல... பட், நம்ம பல்ராமுக்கு...???
இந்த புது வருசம் ஆரம்பிச்சதில இருந்து ......
நியூ இயர் அன்னைக்கி நம்ம பல்ராம் ஸ்வீட் வாங்குறதுக்கு ஒரு டபரா பைக்'ல பல்லாவரம் போயிருக்கான்,
இவனுக்குன்னே வெயிட் பண்ணிட்டிருந்த மாதிரி கப்'னு புடிச்சிட்டாங்க ட்ராபிக் போலீஸ். பயபுள்ளைக்கு லைஸன்ஸ் இருந்து என்ன பிரயோசனம்.... ?? பைக்கு'குதான் ஒன்னுமே இல்லையே? (ப்ரேக் பம்மல்'ல போட்டிருக்கான்... அது வந்து பல்லாவரத்துல நிண்ணுகிச்சு....போலீஸ்காரன் கிட்டே!)
பைன் போட்டிருக்காங்க...ரிஸீப்ட் கொடுத்திருக்காங்க.... வாங்கினவன் .மூடிட்டு வரவேண்டியது தானே? அங்கயே தெனாவெட்டா வாங்கின ரிஸிப்ட்'ல கிழிச்சு போட்டுட்டான்.
போலிஸ் கடுப்பாகி தூக்கிண்டு போயி ஸ்டேஸன்'ல வச்சிட்டாங்க.....
பின்னாடி நானும் என்னோட ஓனரும் ஸ்டேஸன் போகும் போது, அவன் ஜட்டியோடு "வருசம் பொறந்து முதல் நாளே கண்டமா?'ங்கிற மாதிரி உக்காந்து பாத்துக்கொண்டிருந்தான்....


தேதி அஞ்சுல அவன் சம்பளம் வாங்கிகொண்டு...'மச்சி நான் ஊருக்கு போறேன்,(கல்பாக்கம்)....வர்ரதுக்கு ஒரு வாரம் ஆகும்.. கடைய பாத்துக்க!!'னு கெளம்பினவன்...
ஊருக்குப்போன அடுத்த நாளே திரும்பிட்டான்.
'என்னடா ஆச்சு?'னு ஆச்சரியமா கேட்க...அதுக்கு அவன் திகிலா ஒரு பதில் சொன்னான்....
"மாப்ள... நான் லவ் பண்ணிட்டிருந்த பொண்ணுக்கு (சென்னை) திடீர்னு மாப்ள பாக்குறாங்க.... அதான் அவள நானே கல்யாணம் பண்ணிக்குறதுக்குகாக வந்துட்டேன்."
"கல்யாணம் பண்ண போறியா? என்னடா சொல்லுற?"
"வேற வழி தெரியல மாப்ள...."
அப்புறம் பொண்ண கடத்தி...கல்யாணம் பண்ணி ( சங்கர் நகர் போலீஸ் ஸ்டேஷன் ல)
ஒரு மாசம் ஆள் ஆப்ஸ்காண்ட்.


திடீர்னு ஒரு நாள் வந்து நின்னான்.
"என்ன மாப்ள, எப்பிடி இருக்க?"
"அவசரமா காசு தேவை. அதுதான் அண்ணன் கிட்ட (ஓனர்) வாங்கலாம்னு வந்தேன்!!"
அட்வான்ஸ் வாங்கிகொண்டு கல்பாக்கம் போனவனுக்கு ரெண்டு நாள் கழிச்சு நான் போன் செய்தேன்.
""போறவழியிலயே காசு தொலைஞ்சி போச்சின்னும், வைஃப் கு கரண்ட் ஷாக் அடிச்சிருசின்னும், செலவுக்கு சுத்தமா காசில்லனும் சொன்னான்.""


பின்னர், ஒரு வாரம் கழிச்சு வேலைக்கு வந்தான்,
சென்னை ல வீடு பாக்குறேன் பேர்வழினு திரிஞ்சிட்டிருந்தான்...ஒன்றிரெண்டு தடவை ஊருக்கு போய் வந்தான்... அடிக்கடி போனில் போசினான்... இந்த மாசம் சம்பளம் கேட்டதுக்கு மேனேஜர், "உனக்கு பதினஞ்சாயிரம் ஓவர் ட்ராப்!"னு சொன்னாரு....
நேத்து கைபேசியில் அழைப்பு வந்ததும், மூஞ்சியெல்லாம் சுருங்கிபோச்சு!
"என்னாச்சு?"
"என்னோட வைஃப் கண்சீவ் ஆயிருக்கா....!"
"கங்கிராட்ஸ் மாப்ள..."னு கை கொடுத்ததிற்கு, கையை உதறியவன், ஓனரிடம் இன்னும் அஞ்சாயிரம் வாங்கிக்கொண்டு... மறுபடியும் ஊருக்கு கெளம்பினான்.....

Friday, March 4, 2011

பேச்சு பேச்சா இருக்கணும்.....!!


நம்மாளுங்களுக்கு பேச்சுக்கொன்னும் கொறச்சலில்ல.....
பேசவா சொல்லித்தரனும்.....பஸ்'ல... ஆபீஸ்'ல... போன்'ல....(முக்கியமா பிகருங்ககிட்ட!)
பேச்சு....பேச்சு...பேச்சு........
எப்போ பாரு பேச்சு....
இங்க கொஞ்சம் ஏடாகூட பேச்சு.

தியேட்டரில் வேலை பார்க்கும் நண்பன்
போன் செய்தான்.
'மச்சி.. நீ ரெண்டு டிக்கெட் கேட்டல்ல....கிடைச்சிருச்சி....!'
பதிலளித்தேன்.
"மாப்ள..என்னோட 'டிக்கெட்' கழண்டுகிச்சு...ஒன்னு போதும்!

****
நண்பனின் கைத்தொலைபேசி தொலைந்துவிட்டது....
பின்னர், இப்படி ஆரம்பிக்க வேண்டியதாய்
போயிற்று...
'மச்சி..புதுசா ஒரு செல்போனை நோக்கியா அறிமுகப் படுத்தியிருக்கு தெரியுமா?'

****

"" நந்தலாலா முதல் நடு நிசி நாய்கள் வரை
பேசி முடித்து அரசியல் கூட்டணி பற்றி ஆரம்
பித்தேன்.
இடைமறித்தான்.
'வாங்கின கடன் ஞாபகம் இருக்குல்ல?'
நண்பேண்டா.....!!!!

*****

அ.தி.மு.க மேடைகளில் எழும் பேச்சுக்களில் '

ஸ்பெக்ட்ரம்' என திருத்தம் தேவை.
என்னென்ன கருமமோ காதில் விழுந்து தொலைகிறது....
*****

"ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும் போது...பக்கத்தில் வந்த ஆட்டோவுடன் தட்டிவிட்டது...
அவன்; இவனின் அம்மாவின் பூர்வீகம் பற்றியெல்லாம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டான்.....
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.....
*****
பஸ்சில் புட்போர்ட் அடித்துக்கொண்டே வந்தேன்....

கன்டெக்டருக்கு நான் சோறு மட்டும் தான் சாப்புடுகிறேன் என்று விளக்கமெல்லாம் கொடுக்கவேண்டியதாயிற்று.....



*****

moral:

"ஏன்யா நான் கரெக்டா பேசுறனாயா?" இந்த காமெடி டயலாக்க நம்மாளுங்க அடிக்கடி ஞாபகம் வச்சுக்கனும்!!!