நண்பர்ஸ்..

Thursday, May 19, 2011

"பச்ச பச்சையாய்"  பேசலாம்  வாங்க...!!!


.... "என்னடா உன்னோட ப்ளாக் ஒரே பச்சை கலர்'ல இருக்கு?''னு கேக்குறிங்களா ? பெருசா ஏதும் காரணம் இல்லைன்னாலும்,  பச்சை கலருக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கு...
என்னன்னு பாக்கலாமா? (ஹல்லோ எங்க போறிங்க? வேணாம்'னாலும் நாங்க விடமாட்டோம்..) 
      "இச்சை மூட்டும் பச்சை நிறமே..." என்று வைரமுத்து பச்சையை பற்றி எழுதியிருக்கிறார்,... ( அவரு எழுதுவாரு.. தெரியாதா? நீ என்னலே எழுத   வர்ரே? )
 அவர் ஏன் அப்படி எழுதினார்?
காரணம் பச்சைக்கு ரைமிங்'ஆ  இச்சை'ன்னு வந்ததால தான்... வேறென்ன?(மனோ.. ப்ளீஸ் அருவாள கீழ போடுங்க....)

 இந்தியாவின் கிரீன் சிட்டி எது தெரியுமா? அதுக்கு முன்னாடி பெயருக்கு காரணம் சொல்லிடுறேன்... கிரீன் சிட்டி என்றால் பசுமை நகரம்... பசுமை என்றால் பச்சை பசேல் என்று   இருக்கிற இடம்.. அது ஏன் பச்சையா இருக்கு?
ஏன் நீல கலர்ல இல்ல?                   

இதுக்கு பதில் சொல்லுற தகுதி இந்தியாவிலேயே  பன்னிக்குட்டி ராம்சாமி ஒருவருக்கே உள்ளது என்பதால் நேரே  (தப்பிச்சுட்டம்'ல...)
  விஷயத்திற்கு வர்றேன்... இந்தியாவின் பசுமை நகரம் என்று அழைக்கப்படுகிற நகரம் புனே.


 இதுக்கு என்ன அர்த்தம்?

 *பச்ச மண்ணு அப்பிடின்னு சொல்லுறாங்களே? எந்த ஊர்ல மண் பச்ச கலர்ல இருந்திருக்கு?

 *பச்சத்தண்ணி ங்கிறாங்களே?
தண்ணி எப்பிடி பச்ச கலர்ல? 'குடி'மக்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. (விக்கி உலகம் வகையறாக்கள்...)

 *பச்சைபச்சையா பேசுறதுன்னா என்னங்க? ரொம்ப நாளா எனக்கு டவுட்டு.. (உங்கள்'ல  யாருக்காவது  சிவப்பு கலர்'ல பேசுற பழக்கம் இருக்கா?
*கிரீன் டீ தெரியுமா?
'கமீலியா சைனஸிஸ்'  (பமீலா இல்லைங்க..) இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆகும். பசும் தேநீர் (தமிழேன்யா..!) சீனாவில் தோன்றியது,(இது ஒண்ணுதான் உண்மையிலேயே பச்ச கலர்ல இருக்கு!)

நான் ஏன் என்னுடைய ப்ளாக்'அ பச்சையா மாத்திட்டேன்'னா நாமேளும் விவசாயி'தாங்கிறத காமிக்க தான்.. யோவ்.. அவனவன் பூச்செடிக்கு தண்ணி ஊத்திட்டு விவசாயி என்கிறான்... நான் சொன்னா மட்டும் தப்பா...???? 

இத்துடன் அனைத்து மொக்கைகளும் முடிவுக்கு  வருகின்றன...ஓகே நண்பர்களே.. நீங்க பச்சையா கமெண்ட்ஸ் போடுங்க... நான் கெளம்புறேன்...
டிஸ்கி:யாருக்காவது பச்சயா திட்டனும் போல இருந்தால் தனியே மெயிலில் திட்டவும்.ஏனென்றால்  இது மிகவும்  கன்னி... கண்ணியப்பர்... கண்ணியமான் அது என்ன செந்தில்...? எதோ சொல்வீ ங்களே? ஆங்..மிகவும் கண்ணியமான பதிவரால் நடாத்தப்படும்  ப்ளாக்! கரைகட்'டா?... ம்ம்ம்...கெளப்புங்கள்.. ..

டிஸ்கி 02 : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி வெகு விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்போம்...