நண்பர்ஸ்..

Friday, June 10, 2011

தெரியாம குடிச்சிட்டேன்!!!

ல்லா வாசகே பெரிமக்ளுக்கும்........ கிளுக்கும்...க்கும்... வான்க்கம். மொதேள்ளே சொல்லிடுறேன் நா ரொம்பே குடிச்... சிருக்கேன்... காறனம் கீது. அஞ்சி காறனம் கீது.

 மப்பு ஓவரா பூடுச்சி..!  எ  வூட்டாண்ட கீற தோஸ்து... அவன்கு கண்ணாலம்.. ங்கே.. முடிஞ்... ஞ்சிருச்சி... அவென் லைப்ப் கொவின்ட்டா.. கோ..... விண்டா.. நேத்தி நைட்டு திசெப்ச்ன்..  நடந்திச்சா... அங்க தே.. குடிச்சிட்டேன்... ஒவ்ரா.. சாரி.. தல்ல... நீ ஒன்னியும் கோச்சிக்காத...  அங்க இன்னாச்சின்னு கேலேன்.. ச்சும்மா கேலு தல்ல.....

நைட்டு குடிச்சிக்கிட்டே இருந்தோம்மா.. திடீர்னு ஊர்கா காலியாடிச்சி... கடயாண்ட போயி வாங்கியான்னு ஒரு கேப்மாறிய,.... சாரி.. கெட்ட வார்த்த நான் பேஷ்மாட்ட்டேன்..னா   நள்வன்  ..!!!!
ஒரு பிரண்ட அனுப்பினேனா.. அந்த சோமாறி..., ஆங்.. சாரிபா இன்னொரு தபா திட்ட மாட்டேன்... எங்க உட்டேன் ?  அங்க.. ஊர்கா வாங்கியார அனுப்பினேனா அந்த பக்கி கடயாண்ட போயி மாங்கா ஊர்கா வாங்கியாந்திடிச்சி... மனுஷன் திம்பானா மாங்கா ஊர்காவ? அவன மறுபடி கடைக்கு அனுப்பி பூண்டு ஊர்கா வாங்கிவாடான்னு அனுப்பிநேன்பா.. அவனும் சரின்னு போனான்... போனவன அரமணி நேரமா காணோம். இன்னாடா இதின்னு நெஞ்சிக்கிட்டே நாமேலும் கடயாண்ட போயி இன்னான்னு தா  பாக்லாம்னு லுங்கிய இழுத்து அக்குளுக்குள்ள விட்டுகிட்டு...  போனோம்பா... நாங்கே ஒரு நாலு பேரு...!!!

 பிலடி ராச்கள்.. யாரோ ரெண்டு பேரு அவன பூட்டு அந்தா அடி அடிச்சிட்டிருக்கானுவோ... நா அப்பிடியே மெர்சலாயிட்டேன்... இன்னா தேகிர்ரியம் ஈந்தா எனோட பிரண்டு மேலயே கைய வப்பானுவோ...
"தடாய்... "அப்பிடின்னு சத்தம் போட்டுகிட்டே ஓடிபோயி கிட்டக்க பாத்தா.............



அடிச்சிட்டிட்டு இருக்கிறது போப்..போப்..போலீஸூ...
  திரும்பிபாத்தாக்கா கூட வந்தவனுங்கோ யார்யுமே கான்னோம்.. அடிச்சிக்கிட்டிருக்கிரவண விட்டுபுட்டி என்னைய புடிச்சி வண்டில ஏத்தி ப்புட்டானுவோ  போலீசு... !!!

 அப்றமா  போலீசு கைல கால்ல வீந்து... எஸ்கேப்பு ஆகிட்டேன்... குடிபோதையிலேயே இந்தா பதிவு போட்டுக்கிட்டிருக்கேனே..


ப்றமா இன்னொரு விஷயம் சொல்லணும்... இன்னைக்குதே பி.எஸ்.என்.எல் பில்லு கட்டிநேநேனா, ( நம்ம குரோம்பேட்டையில தாம்பா)  அப்போ  இந்த டீபிகா
படுகோன் இல்ல டீப்பிக்கா..
அந்த குட்டியோட பேனர் பாத்தேம்பா... இன்னா அளகா கீரா தெர்யுமா .. அந்த பொண்ண தா கண்ணாலம் கட்டிக்கணும்னு நா முடிவு பண்ண்ட்டேன்..   பொண்ணு  வீட்டுக்காரங்க என்னய  தொடர்ப்பு கொல்லுங்க..


ப்புறம் இன்னொரு மேட்டரு... சென்னைல புட்சா சிகரெட்டு ஒன்னு அறிமுகப்படுத்திருக்காணுவ போல.. அது பேரு கூட ரெட் அண்டு ஒயிட்னு என்னமோ வரும்... இன்னைக்கு அசோக் நகர்ல டீ சாப்பிட்டுக்கிட்டிருக்கிரப்போ  ஒரு சாவுக்கிராக்கி என்னாண்ட வந்து சார் சிக்ரெட் குடிக்கிற பள்க்கம்   இருக்கான்னு கேட்டான்,... அத்த ஏண்டா நீ கேக்கற ன்னு கேட்டதுக்கு அவன் சொன்னான்
"சார்.. எங்க புது சிகரெட் ஒரு பாக்கெட்  வாங்கனா உங்களுக்கு புது படத்துக்கு டிக்கெட் கிடைக்கும்"னு...
"பரவால்லையே,... இன்னா படத்துக்குப்பா இன்னா தியேட்டர்?"னு ஆர்வமா கேட்டேன்... அதுக்கு அவன் நாளைக்கு ரிலிசாவுற "அவன்-இவன்" படத்து டிக்கெட்  சார், பர்ஸ்ட்டு டே பர்ஸ்ட்டு ஷோ"  ன்னான்... சரின்னு சொல்லி நாலு சிகரெட் பாக்கெட்டும் அதுக்கு அவன் குடுத்த இலவச டிக்கெட்டும் காசு குடுத்து வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்  ......
 கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதா அந்த உண்ம எனக்கு தெரிஞ்சுது   ..










கொய்யால அவன்-இவன் படம் வர்ற 17 ம் தேதிதான் ரிலிச்சாம்! 

டிஸ்கி: இப்போ போதை  தெளிஞ்சிடிச்சி!

22 comments:

நிரூபன் said...

அடிங்...என்னா கொல வெறி உனக்கு...
போதையில புது லாங்குகேஜ் பேசுறியா...

நிரூபன் said...

மாப்பு நீங்க என்ன புளிச்ச கள்ளா குடிச்சீங்க...

உலக நடப்பு முதல், உள்ளூர் போன் கடையில் உள்ள நடிகையோட படத்திற்கான அர்த்தம் வரை சொல்லுறீங்களே சகா.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வலையுலக வரலாற்றிலேயே ** என்னான்னு தெரியலி யேபா ...** என்று லேபல் போட்ட ஒரே ஆள் நீதாம்பா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அல்லா வாசகே பெரிமக்ளுக்கும்........ கிளுக்கும்...க்கும்... வான்க்கம். மொதேள்ளே சொல்லிடுறேன் நா ரொம்பே குடிச்... சிருக்கேன்... காறனம் கீது. அஞ்சி காறனம் கீது.

என்னது அஞ்சு காரணமா? யாரு அந்த சைதாப்பேட்டை அஞ்சு! அவதான் ஒரு சேட்டு கூட ஓடிப் போயிட்டாளே!!!!!

டக்கால்டி said...

he he..shoka keethu naina!!!

Unknown said...

:-)

சரியில்ல....... said...

நிரூபன் said...

அடிங்...என்னா கொல வெறி உனக்கு...
போதையில புது லாங்குகேஜ் பேசுறியா...?////

சரக்கு உள்ளார பூடிச்சின்னாக்கா அப்பிடிதே வறும்...

சரியில்ல....... said...

நிரூபன் said...

மாப்பு நீங்க என்ன புளிச்ச கள்ளா குடிச்சீங்க...

உலக நடப்பு முதல், உள்ளூர் போன் கடையில் உள்ள நடிகையோட படத்திற்கான அர்த்தம் வரை சொல்லுறீங்களே சகா.///

புளிச்ச கள்ளா? அப்பிடி ஒரு அயிட்டம் இருக்கா? சொல்லவே இல்ல... அது எங்க கிடைக்கும்... ? எனக்கு ஒரு அஞ்சு பாட்டில் வேணும்...

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வலையுலக வரலாற்றிலேயே ** என்னான்னு தெரியலி யேபா ...** என்று லேபல் போட்ட ஒரே ஆள் நீதாம்பா///

சரி...சரி...அண்ணனோட டேலண்டட பிரசங்கம் பண்ணாதப்பா...

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அல்லா வாசகே பெரிமக்ளுக்கும்........ கிளுக்கும்...க்கும்... வான்க்கம். மொதேள்ளே சொல்லிடுறேன் நா ரொம்பே குடிச்... சிருக்கேன்... காறனம் கீது. அஞ்சி காறனம் கீது.

என்னது அஞ்சு காரணமா? யாரு அந்த சைதாப்பேட்டை அஞ்சு! அவதான் ஒரு சேட்டு கூட ஓடிப் போயிட்டாளே!!!!!//

நாசமா பூட்டுது... எனக்கு மேல நீ மகா மட்டமான குடிகாரன்யா நீ...

சரியில்ல....... said...

டக்கால்டி said...

he he..shoka keethu naina!!!///

ஆங்... நந்தி தலிவா நந்தி...

சரியில்ல....... said...

ஜீ... said...

:-)//

இன்னா மேன் இளிக்கிற? படுவா பிச்சி...

Pranavam Ravikumar said...

Ayyo...Ayyo...!

உணவு உலகம் said...

ஹா ஹா ஹா

உணவு உலகம் said...

வித்யாசமான பகிர்வு. நடத்துங்க.

சி.பி.செந்தில்குமார் said...

HAA HAA HAA SEMA MAPPAA MAAPPU?

Unknown said...

மாப்ள ஹிஹி சூபரு!

மாலதி said...

வித்யாசமான பகிர்வு. நடத்துங்க.

மாலதி said...

ஹா ஹா ஹா

அம்பாளடியாள் said...

நல்லதொரு பகிர்வு நன்றி வாழ்த்துக்கள்.

vidivelli said...

அசத்தலான பதிவு..
வாழ்த்துக்கள்...



can you come my said?

ஹேமா said...

சரியில்ல....இது சரியில்ல.
தண்ணியடிச்சிருக்கீங்க அவ்ளோதான்.ஒண்ணுமே புரிலங்கோ.