கடந்த நான்கு நாட்களாக கும்பகோணத்தில் கும்மி அடித்து விட்டு இப்போதுதான் பாக் டு பார்ம். (சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்..)
கையில் மடிக்கனணியோ, வேறு சாதனங்களோ இல்லாத காரணத்தினால் ஆப்ஸ் காண்ட்.
தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான கோயில்கள் அனைத்தையும் (கிட்டதட்ட..) பார்த்துவிட்டேன். எஞ்சியிருந்த கோயில்களை கடந்த நான்கு நாட்களில் முடித்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.. (என்ன ..., 'மனம் கொத்தி பறவை' ரேஞ்சுக்கு இருக்குனு பாக்குறிங்களா? ஊம்.. சுயபுராணம்..)
நான் இப்போ ரெண்டு விஷயம் சொல்லப்போறேன்... ரெண்டுமே கோயில்கள் பத்தின விஷயம் தான்.,...

ஆச்சரியமான விஷயம்.. அழகு தமிழில் அர்ச்சனை .
புரியாத மொழியில் ஐயர் பூஜை செய்யும் போது கவனம் எல்லாம் எங்கேயோ இருக்கும்... ஆனால் இங்கு.. அழகு தமிழில் சுவாமிக்கு வாழ்த்து ,பாடல்கள் எல்லாம் நடைபெற்றது . (வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் அநேகம் பேர் இந்த அர்ச்சனையை காண தமிழ்நாடுதான் வரவேண்டும் என நினைக்கிறேன்..)
அதுமட்டுமில்லாமல் வெளியூரில் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு தமிழிலேயே அந்த கோயிலின் ஸ்தல புராணம், பெயர்க்காரணம் சொல்லி பூஜை செய்தது மகா ஆச்சரியம்...
கலக்கல் கற்சிற்பம் !!!

மார்க்கண்டேயர் கோயிலில் (அட அவர்தானுங்க.. என்றும் பதினாறு'னு மனுஷன்! ) அவர் தங்கியிருந்த இடம்... அந்த கோயில் எல்லாமே கொள்ளை அழகு.
இந்த சம்மருக்கு உங்க பேமிலியோடு டூர் அடிக்க இத் திருத்தலங்களை தேர்வு செய்தீர்கள் என்றால் மனநிறைவு, நிம்மதி கிடைப்பது மட்டுமில்லாமல் இதைக்கொண்டே இரண்டு பதிவுகளை தேத்தி விடலாம். (ஐடியா !!)
டிஸ்கி: கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் ஸ்ரீ கூகுல் ஆண்டவர் உதவியோடு இங்கே சில க்ளிக்'கள்.
டிஸ்கி: ஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு. ஓனருக்கு என் மேல கடுப்பு.
இதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....

23 comments:
வணக்கம் சகோ, நன்றாக Enjoy பண்ணியிருக்கிறீர்கள் போல இருக்கிறது. மீள் வருகை மகிழ்ச்சி, தல யாத்திரை செய்திருக்கிறீர்கள். கடவுள் சம கால எலக்சன் பற்றி ஏதாவது சொல்லியிருக்காரா?
Appaalika varen
கையில் மடிக்கனணியோ, வேறு சாதனங்களோ இல்லாத காரணத்தினால் ஆப்ஸ் காண்ட்.//////////////////////
மடிக்கணணி மடியில தானே இருக்கும்! கையில எப்படி இருக்கும்? பேசாம லாப் டாப்பு னு தமிழ்லேயே சொல்லியிருந்தா இந்தச் சிக்கல் வந்திருக்காதுல்ல!!
தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான கோயில்கள் அனைத்தையும் (கிட்டதட்ட..) பார்த்துவிட்டேன்.
குஷ்புவுக்கு ஒரு கோயில் கட்டினாங்களே! அத பார்த்தியா?
புரியாத மொழியில் ஐயர் பூஜை செய்யும் போது கவனம் எல்லாம் எங்கேயோ இருக்கும்...
ஆய்....ஆய்....ஆய்.... ! இந்த சாட்டு சொல்லுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத! கோயிலுக்கு போறேன்னு போகவேண்டியது! அங்கவர்ற பிகருகள பார்த்து ஜொள்ளு விடவேண்டியது! அப்புறம் ஐயர் சொன்ன மந்திரம் புரியல அதனால, கவனம் சிதறிடிச்சு அப்டீன்னு ரீலு விட வேண்டியது!! மவனே பிச்சுப்புடுவேன் பிச்சு!!
ஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு. ஓனருக்கு என் மேல கடுப்பு.
இதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....
பேசாம போத்திக்கிட்டு படப்பு!
நிரூபன் said...
வணக்கம் சகோ, நன்றாக Enjoy பண்ணியிருக்கிறீர்கள் போல இருக்கிறது. மீள் வருகை மகிழ்ச்சி, தல யாத்திரை செய்திருக்கிறீர்கள். கடவுள் சம கால எலக்சன் பற்றி ஏதாவது சொல்லியிருக்காரா?///
அடடா நிரு... இந்த விஷயத்த கடவுள்கிட்ட கேக்க மறந்துட்டேனே?
டக்கால்டி said...
Appaalika வரேன்
வாங்க...வாங்க...
மடிக்கணணி மடியில தானே இருக்கும்! கையில எப்படி இருக்கும்? பேசாம லாப் டாப்பு னு தமிழ்லேயே சொல்லியிருந்தா இந்தச் சிக்கல் வந்திருக்காதுல்ல!!///
வந்திருக்காதுதான்... தப்புத்தே..தப்புத்தே...தப்புத்தேன்...
குஷ்புவுக்கு ஒரு கோயில் கட்டினாங்களே! அத பார்த்தியா?///
அடப்பாவி..
ஆய்....ஆய்....ஆய்.... ! இந்த சாட்டு சொல்லுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத! கோயிலுக்கு போறேன்னு போகவேண்டியது! அங்கவர்ற பிகருகள பார்த்து ஜொள்ளு விடவேண்டியது! அப்புறம் ஐயர் சொன்ன மந்திரம் புரியல அதனால, கவனம் சிதறிடிச்சு அப்டீன்னு ரீலு விட வேண்டியது!! மவனே பிச்சுப்புடுவேன் பிச்சு!!///
அட...இதப்பாருயா... கோயில்ல சைட் அடிக்கலாமா? இத்தினி நாளா இது தெரியாமப்போச்சே...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு. ஓனருக்கு என் மேல கடுப்பு.
இதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....
பேசாம போத்திக்கிட்டு படப்பு!
ஹி..ஹி ..ஹி...
அட.... சிங்கம் கெளம்பிருச்சே.......!
///தமிழில் அர்ச்சனை../////
கேக்கவே நல்லாருக்கே....?
////////டிஸ்கி: ஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு. ஓனருக்கு என் மேல கடுப்பு.
இதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....///////
யார்யா அது ஓனரு, கோனாருன்னுக்கிட்டு, அவருக்கு ஒரு ஆஃப் வாங்கிக்கொடுத்து அமுக்குய்யா.....!
//////// சரியில்ல....... said...
ஆய்....ஆய்....ஆய்.... ! இந்த சாட்டு சொல்லுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத! கோயிலுக்கு போறேன்னு போகவேண்டியது! அங்கவர்ற பிகருகள பார்த்து ஜொள்ளு விடவேண்டியது! அப்புறம் ஐயர் சொன்ன மந்திரம் புரியல அதனால, கவனம் சிதறிடிச்சு அப்டீன்னு ரீலு விட வேண்டியது!! மவனே பிச்சுப்புடுவேன் பிச்சு!!///
அட...இதப்பாருயா... கோயில்ல சைட் அடிக்கலாமா? இத்தினி நாளா இது தெரியாமப்போச்சே...///////
நாசமா போச்சு........!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///தமிழில் அர்ச்சனை../////
கேக்கவே நல்லாருக்கே....?
அத தானே நாங்களும் சொல்லுறோம்... கேக்கவே நல்லாருக்கு.. ஹிஹிஹி...
யார்யா அது ஓனரு, கோனாருன்னுக்கிட்டு, அவருக்கு ஒரு ஆஃப் வாங்கிக்கொடுத்து அமுக்குய்யா.....!///
ஹிஹி... செம்ம காமெடி...
நவ கிரக கோவிலுக்கும் போனீங்களா..
Blogger கமலேஷ் said...
நவ கிரக கோவிலுக்கும் போனீங்களா..//
ஆமா கமலேஷ். எல்லாக் கோயிலுக்கும் போனேன். சனீஸ்வர பகவான்,,சரபேஷ்வரன், கர்க்கடேஷ்வரர்..., மகாலிங்கேஸ்வரர் , திருநாகேஸ்வரர்,வைத்தீஸ்வரர்,மார்க்கண்டேயர்..,சுப்ரமணிய சுவாமி.. onnu paakkiyilla..
////அழகு தமிழில் சுவாமிக்கு வாழ்த்து ,பாடல்கள் எல்லாம் நடைபெற்றது . (////
உண்மையில் கேட்க சந்தோசமாயிருக்கு தமிழ் கடவுளுக்கு இப்பத் தான் நாம் என்ன வேண்டகிறோம் என தெரிந்திருக்கும்...
////அழகு தமிழில் சுவாமிக்கு வாழ்த்து ,பாடல்கள் எல்லாம் நடைபெற்றது . (////
உண்மையில் கேட்க சந்தோசமாயிருக்கு தமிழ் கடவுளுக்கு இப்பத் தான் நாம் என்ன வேண்டகிறோம் என தெரிந்திருக்கும்...///
ஹி..ஹி...ஆமா சுதா..
ஓட்டு போடலைன்னா டென்ஷன் ஆகிடுவீங்க்ளா? ஓக்கே ஏப்ரல் 13 க்கு போடறோம்
Post a Comment